அமெரிக்காவில் விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்திருக்கிறார்.
அமெரிக்க நாட்டில் டென்வெரி என்னும் பகுதியில் இருந்து ஓர்லாண்டோ சென்ற விமானத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் பயணித்திருக்கிறார். அப்போது விமானம் நடு வானில் சென்று கொண்டிருந்த சமயத்தில், அந்த பெண்ணிற்கு பிரசவ வலி வந்தது. எனவே, பென்சகோலா என்னும் பகுதிக்கு விமானத்தை திருப்ப விமானி தீர்மானித்தார். அப்போது, விமான பணிப்பெண் உடனடியாக அந்த கர்ப்பிணிப் பெண்ணின் பிரசவத்திற்கு உதவியிருக்கிறார்.
எனவே, விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன்பாகவே அந்த பெண் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்து விட்டார். விமானம் தரையிறங்குவதற்கு முன்பே அங்கு மருத்துவர்கள் காத்திருந்தனர். அவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து குழந்தை நன்றாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். அந்த பெண், தன் குழந்தை நடுவானில் பிறந்ததால் ‘ஸ்கை’ என்று பெயர் வைத்திருக்கிறார்.