Categories
சிவகங்கை மாநில செய்திகள்

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமாகி வீடு திரும்பினர்!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் உதகை மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்த 30 பேரில் 28 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.

இதேபோல சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் சால்வை கொடுத்து மரியாதை செலுத்தி அனுப்பி வைத்துள்ளார். மேலும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். 21 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 13 பேர் வீடு திரும்பியுள்ளதாக ஆட்சியர் கதிரவன் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |