பட்டாசு ஆலை பராமரிப்பு ஆய்வுக்குழு கூடிய சீக்கிரம் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளும் என்று மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார். பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதன் முதற்கட்டமாக நீர்த்துப்போன மருந்து உபயோகித்து பயன்படுத்தியதால் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 5 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 19 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து பட்டாசு ஆலை பராமரிப்பு ஆய்வுக்குழு கூடிய சீக்கிரம் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.