Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மாப்பிள்ளை கேட்டு போனோம்” சகோதரிகள் மீது தாக்குதல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மாப்பிள்ளை கேட்டு காதலன் வீட்டிற்கு சென்ற சகோதரிகளை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் நாகபூஷணம் என்பவர் வசித்து வருகிறார். இவரும் யுவராணி என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் யுவராணி தனது சகோதரிகளுடன் நாகபூஷணம் வீட்டிற்கு மாப்பிள்ளை கேட்டு சென்றுள்ளார். அப்போது நாகபூஷணத்தின் தந்தையான வெங்கடேஷ், உறவினரான முருகராஜ் போன்றோர் இணைந்து யுவராணி மற்றும் அவரது சகோதரிகளை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அப்போது கோபமடைந்த இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு தரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் இருதரப்பினர் சார்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |