சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறுமி அந்த வாலிபர் குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 1 2 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக மாதவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.