Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா….? 15 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

காதலிக்குமாறு வற்புறுத்தியதால் 15 வயது சிறுமி சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்புலியூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் முத்துகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் அப்பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த சிறுமி திடீரென தனது வீட்டில் சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்து கிருஷ்ணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |