பின்னணி பாடகர் வேல்முருகன் எஸ்.பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டி உருக்கமான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
கொரோனா தொற்று ஏற்பட்டு பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் நேற்று அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அறிக்கையை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தனர். எஸ்பி உடல் நலம் பெற வேண்டி சினிமா பிரபலங்கள், பாடகர்கள், இசை அமைப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
இன்று எஸ்பிஇன் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக, தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியானது. இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் எஸ் பி பாலசுப்பிரமணியம் நலம் பெறவேண்டும் என்று பாடல் பாடியுள்ளார். ’50 வருடமாக அசையாத விருட்சமாக பாட்டு தேர் ஏறி பவனி வரும் பாடும் நிலா பாலு… சீக்கிரம் குணம் அடைந்து வருவார்கள் பாரு…’ என்ற பாடலை பாடி வேல்முருகன் வெளியிட்டுள்ளார்.