Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் குறைந்த கொரோனா தொற்று.. 9 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் நீக்கம்.. வெளியான அறிவிப்பு..!!

சிங்கப்பூர் அரசு, பிரிட்டன் உட்பட சுமார் ஒன்பது நாடுகளுக்கு விதித்த விதிமுறைகளை நீக்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

சிங்கப்பூர் அரசு, கொரோனாவை கட்டுப்படுத்த, பிற நாட்டு மக்களுக்கு கடும் விதிமுறைகளை  நடைமுறைப்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது அங்கு கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

எனவே, வரும் 13 ஆம் தேதியிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது.

அதே நேரத்தில் நவம்பர் மாதம் முதல் தென் கொரிய நாட்டு மக்களும் இரண்டு தவணை தடுப்பு செலுத்தியிருந்தால், நாட்டிற்குள் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |