Categories
சினிமா

“வா தல, வா தல!”….. மீண்டும் பட்டய கிளப்பப்போகும் சிம்பு…. மாஸா வெளியான புது அப்டேட்….!!

ஓ மை கடவுளே திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வந்த் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்புவிற்கு தற்போது 38 வயது ஆகிறது. அவரின் திரையுலக அனுபவம் 37 வருடங்கள். அதாவது, சிம்பு தன் ஒரு வயது முதல் திரையுலகில் நடித்துக்கொண்டிருக்கிறார். எனினும், “காதல் அழிவதில்லை” என்ற திரைப்படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே மாஸாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, மன்மதன் திரைப்படம் மீண்டும் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. அதன்பின்பு, வல்லவன் திரைப்படத்தை அவரே இயக்கினார். இதன்மூலம், நடிகர், பாடலாசிரியர், கதையாசிரியர் மற்றும் இயக்குனர் போன்ற பன்முக திறமையுடன் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் கடந்த 2012 ஆம் வருடத்திலிருந்து 2015 ஆம் வருடம் வரை அவருக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டது.

அவர் நடித்த திரைப்படங்கள் வெளிவரவில்லை. வெளிவந்த படங்களும் ஓடாமல் போனது. மேலும், ஒரு பாடல் பிரச்சனை, காதல் தோல்வி என்று பல பிரச்சனைகள் அவருக்கு அடுக்கடுக்காக வந்தது. அவை அனைத்தையும் தாண்டி தற்போது அவரின் மாநாடு திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது.

இத்திரைப்படத்தில் கிடைத்த வெற்றியால் சிம்புவிற்கு மேலும் பல திரைப்படங்களில் நடிக்க உத்வேகம் கிடைத்திருக்கிறது. தற்போது, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” இயக்குனர் கோகுலுடன் கொரோனா குமார், இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல போன்ற பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஓ மை கடவுளே திரைப்பட இயக்குனரான அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |