முன் விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள குதிரைசாரிகுளத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக கிரில் கேட் பட்டறை வைத்து நடத்தி வருகின்றார். இதனை அடுத்து முருகனின் தம்பியான முத்து மற்றும் அவரின் 14 வயதுடைய மகனும் பட்டறை கடையில் இருந்துள்ளனர். அப்போது 2 பேர் கடைக்கு வந்து தங்கள் வீட்டிற்கு கேட் அமைக்க வேண்டும் என்று முத்துவையும் அவரின் மகனேயும் அழைத்து சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தர்மத்துப்பட்டி விலக்கு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் முருகன் மற்றும் அவரின் மகனை சரமாரியாக அரிவாளால் வெட்டி சென்றுள்ளனர். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அதன்பிறகு முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் இருவரையும் அரிவாளால் வெட்டி இருக்கலாம் என காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.