Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….. நல்லெண்ணெய், பாமாயில் விலை கிடுகிடு உயர்வு….!!!!!

விழுப்புரம் சந்தையில் அத்தியாவசியமான பொருட்களின் விலைப்பட்டியல் வாரம் தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரத்தை விட நல்லெண்ணெய் மற்றும் பாமாயிலின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு டின் நல்லெண்ணெய் 5610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு டின்னுக்கு 165 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், 5775 ரூபாயாக இருக்கிறது.

இதேபோன்று கடந்த வாரம் 1530 ரூபாயாக இருந்த பாமாயிலின் விலை தற்போது ஒரு டின்னுக்கு 40 ரூபாய் உயர்த்தப்பட்டதால் 1570 ஆக இருக்கிறது. இந்த விலை உயர்வினால் இல்லத்தரசிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் மல்லி மற்றும் உருட்டு உளுந்தின் விலை கடந்த வாரத்தை விட சற்று குறைந்துள்ளது.

Categories

Tech |