Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!! பிரபல நடிகைக்கு…. கொரோனா தொற்று உறுதி…!!

பிரபல தமிழ் நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு தற்போது கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என்று பல மொழிகளிலும் நடித்து வரும் பிரபல நடிகை ராகுல் பிரித் சிங். இவருக்கு தற்போது கொரோனா உறுதியாகி உள்ளது. இவர் தீரன் தைக்கரம் ஒன்று, எஜிகே, தேவ், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனக்கு கொரோனா உறுதியானதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எனக்கு கொரோனா உறுதியானதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.

நான் சுயமாக தனிமை படுத்திக்கொண்டேன். தற்போது நலமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் படப்பிடிப்புக்கு திரும்புவேன்.என்னுடன் தொடர்பில் இருந்த எல்லோரும் தயவுசெய்து கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். அனைவருக்கும் நன்றி. தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |