ஓமன் வளைகுடாவில் வைத்து கடத்தப்பட்ட பனமா சரக்கு கப்பல் ஈரான் படைகளால் கடத்தப்பட்டுள்ளது என Lloyds List Maritime Intelligence தெரிவித்துள்ளது
ஓமன் வளைகுடாவில் ஹோர்முஸ் ஜலசந்தி அருகே சென்று கொண்டிருந்த பனமா MV Asphalt Princess சரக்கு கப்பலை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இதனிடையே அந்தக் கப்பலை கடத்தி சென்ற மர்ம நபர்கள் ஈரானுக்கு கப்பல் செல்லுமாறு கூறியதாக தகவல் வெளியானது. மேலும் கப்பலை யார் கைப்பற்றியுள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை எனினும் ஈரான் படைகள் தான் கடத்தியதாக கப்பலை கடத்தியதாக Lloyds List Maritime Intelligence தெரிவித்துள்ளது
இதனை தொடர்ந்து ஈரான் இது எங்கள் நாட்டிற்கு எதிரான குற்றச்சாட்டு என்று போலியான காரணம் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கப்பலை கடத்திய மர்ம நபர்கள் கப்பலை விட்டுச் சென்று விட்டதாகவும் தற்போது பிரிட்டானியா கடற்படை பாதுகாப்பில் கப்பல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன் துபாய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஈரான் படைகளால் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.