Categories
உலக செய்திகள்

தென் சீன கடலில் ஏற்பட்ட கடும் புயல்…. இரண்டாக பிளந்த கப்பல்… 27 பயணிகள் மாயம்…!!!

சீன நாட்டின் ஹாங்காங் பகுதியில் பயணித்த கப்பல் ஒன்று இரண்டாக பிளந்து போனதில் 27 பேர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன நாட்டின் ஹாங்காங் மாகாணத்தில் ஒரு கப்பல் 30 நபர்களுடன் சென்றுள்ளது. கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த கப்பல் திடீரென்று கடும் புயலில் சிக்கியது. இதனால், கப்பல் இரண்டாகப் பிளந்ததில் பயணிகள் 30 பேரும் கடலுக்குள் விழுந்து விட்டனர்.

இதனைத்தொடர்ந்து தகவலறிந்து, அந்த பகுதிக்கு சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். இதில், மூவர் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள். எனினும் மீதம் இருக்கும் 27 பேர் என்ன ஆனார்கள்? என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. மாயமான 27 நபர்களையும் மீட்புப்படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Categories

Tech |