ஆடு மேய்க்கும் தொழிலாளி 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழைய அப்பனேரி கிராமத்தில் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சுபாஷினி என்பருக்கு கணேஷ்குமார் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கொடுத்த தகவலின் படி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமியை சந்தித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கணேஷ் குமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியாகிவிட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் கணேஷ் குமார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.