Categories
உலக செய்திகள்

5 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது மாணவிக்கு நடந்த அவலம்…. நாடு விட்டு நாடு ஓடிய ஆண் நபர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வேறு நாட்டுக்கு தப்பி ஓடிய நபரை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் ஜோஸ் மணியுல் என்ற நபர் கடந்த 2016ம் ஆண்டு ஒரு பள்ளியில் உதவியாளராக  பணிபுரிந்து வந்தார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 17 வயதுடைய மாணவி ஒருவரிடம் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஜோஸ் மணியுலிடம் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

பின்னர் ஜோஸ் மணியுல் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து மெக்சிகோவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினருக்கு ஜோஸ் மணியுல் பற்றி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சிறிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் மெக்சிகோவிற்கு விரைந்து அவரை கைது செய்து செய்துள்ளனர். மேலும் இந்த வாரத்தில் அவர் மெக்சிகோவிற்கு கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |