Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கு… தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை…!!

பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கிலிருந்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு கோவாவில் உள்ள ஹோட்டலில் சக பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெஹல்கா பத்திரிக்கை நிறுவனரும், முன்னாள் தலைமை செய்தி ஆசிரியருமான தருண் தேஜ்பால் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே ஆண்டில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் 2014ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்தார். தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்தார்.

மும்பை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை நிராகரித்தது. பிறகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை கோவா நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. இதன்படி கோவா நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவரை கோவா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |