முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பாக புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளதாக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்து வந்தார்.
இன்று சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி ஏழு பேர் குறித்த விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என தெரிவித்தார். ஆளுநர் தரப்பு தனது கருத்தை தற்போது வெளியிட்டுள்ளது. 7 பேர் விடுதலை குறித்த விவாதத்தில் குடியரசுத் தலைவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்றமும் ஒரு வாரத்துக்குள் ஆளுநர் இதுகுறித்து முடிவெடுப்பார் என்று கூறி இந்த வழக்கை ஒத்தி வைத்து இருந்த நிலையில் ஆளுநர் தனது கருத்தை வெளியிட்டு வழக்கை நிராகரித்துள்ளார். இதனால் மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிற்பதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.