Categories
கல்வி மாநில செய்திகள்

செப்டம்பர் 28ஆம் தேதி பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!!

பி.இ., பி.டெக்., பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. பின்னர் 25 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 28-ஆம் தேதி பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்திருக்கிறார். மாணவர்கள் சிலர் சான்றிதழை இன்னும் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதால் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அழிப்பதற்காக தரவரிசை பட்டியல் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |