Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செம்பருத்தியால் நம்மை அறியாமலே விலகிச்செல்லும் நோய்கள் …!

ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது ஒரு மருத்துவர் இருப்பதற்குச் சமம். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது…

1.இந்த பூக்களில் உள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை கட்டுப்படுத்தும். ஹார்மோன்களை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்திகின்றன.

2.உடல் மற்றும் மனதில் தோன்றும் ஒருவித உஷ்ணம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி உடலுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு அமைதியையும் தரும் அற்புத மூலிகை செம்பருத்தி.

3.தினமும் 5 முதல் 10 செம்பருத்திப் பூக்களை சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல தேவையே இருக்காது.

4.செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்கள் அரை கைப்பிடி, சீரகம்-1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர  உடல் உஷ்ணம் தணியும். வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை,அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

5.வயிற்றுப்புண்,வாய்ப்புண் உள்ளவர்கள் காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று சாப்பிட்டு சிறிது நீர் அருந்தி வந்தால் உடனே குணமாகும்.

6.செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைப்பொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டும்.இதை தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி முடி நன்கு கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

7.செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன் பொடுகு தொல்லை சுத்தமாக இருக்காது.

8.பெண்களை அதிகம் பாதிக்கும் கடுமையான வெட்டை நோய் உள்ளவர்கள் செம்பருத்தி பூவே அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் முற்றிலும் குணமாகிவிடும்.

9.இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் இரண்டையும் கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால். இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.

 

Categories

Tech |