பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மோளையானூர் பகுதியில் பொன்முடி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தாரகை என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இதில் மாணவி தாரகை இரவில் நீண்ட நேரம் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் தாரகையே அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த தாரகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாரகையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.