50 மணல் மூட்டைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்று கரையில் இருந்து மணலை கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீ நாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைவாக சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியிலிருந்து மணலை கடத்தி வந்து மூட்டைகளாக கட்டி பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மொத்தமாக 50 மூட்டைகள் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் சாரதி மற்றும் ராமு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 மணல் மூட்டைககளை காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.