காஞ்சிபுரம் அருகில் வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4300 வெளிமாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் அமைந்துள்ள தண்டரை புதுச்சேரியில் உள்ள வயல்வெளியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினருக்கு ரகசிய துப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், திருமூர்த்தி என்பவரின் , வயலில் 90 பெட்டிகளில் 4300 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர் . போலீசார், தலைமறைவாக உள்ள திருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.