Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற கோரி… மத்திய அரசை கண்டித்து… த.மு.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்…!!

தென்காசி மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி த.மு.மு.க கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை மேலூர் பள்ளிவாசல் பகுதி, பம்புஹவுஸ் ரோடு மற்றும் கீழத்தெரு பள்ளிவாசல் போன்ற பகுதிகளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், அதனை திரும்பபெறக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகி முஹிலாஷா இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து கழக உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |