Categories
தேசிய செய்திகள்

“எப்படிலாம் ஏமாத்துறாங்க பாருங்க”…. இன்சூரன்ஸ் பணத்தை குறி வைக்கும் மோசடிகாரர்கள்…. உஷாரய்யா உஷாரு….!!!!

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா காலத்திற்கு பிறகு பொதுமக்கள் அதிக அளவில் இன்சூரன்ஸ் எடுக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக குடும்ப நிதி பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிதி பாதுகாப்பு போன்றவைகளுக்காக இன்சூரன்ஸ் எடுக்கிறார்கள். இவர்கள் நிதி நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி இன்சூரன்ஸ் பாலிசிகள் ஒருபுறம் அதிகரித்தாலும், இன்சூரன்ஸ் பாலிசிகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அதாவது இன்சூரன்ஸ் முடியும் காலத்தில் ஓரிரு மாதங்களுக்கு முன்பாக பாலிசிதாரர்களுக்கு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு அல்லது குறுஞ்செய்தி மூலமாக உங்களுடைய பாலிசிகள் ரத்தாகும் நிலையில் இருப்பதாக பயமுறுத்துகிறார்கள். அதோடு பாலிசிகள் ரத்தாகாமல் இருக்க வேண்டும் எனில் உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி பணத்தை பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். அதோடு பாலிசிகளின் சில கவர்ச்சிகரமான ஆபர்கள் இருக்கிறது என்று போலியான மெசேஜ்களை அனுப்பியும் மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

எனவே தெரியாத நபர்களிடம் இருந்து அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மற்றும் லிங்குகளை யாரும் தொடக்கூடாது. ஒருவேளை உங்களுக்கு பாலிசி சம்பந்தமாக ஏதாவது மெசேஜ் வந்தால் நீங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தை அணுக வேண்டும். ஏனெனில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இது போன்ற செய்திகளை செல்போனுக்கு அனுப்பாது.

உங்களுடைய பாலிசி தொடர்பான அனைத்து விதமான சந்தேகங்களும் தீர்ந்த பிறகு நீங்கள் பாலிசிகள் எடுப்பதோடு, பாலிசி தொடர்பாக வரும் மெசேஜ் மற்றும் அழைப்புகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்நிலையில்  குறுஞ்செய்தி அல்லது செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு யாராவது பாலிசி காலம் ரத்தாகிவிடும் பணத்தை உடனடியாக செலுத்துங்கள் என்று கூறினால் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். மேலும் எப்போதும் எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே ஆன்லைன் மோசடிக்காரர்களிடமிருந்து உங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்கும்.

Categories

Tech |