தாய் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள மணக்காடு தெருவில் தலவாய்பட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் பாண்டி என்ற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திக் பாண்டி பள்ளிக்கூடத்திற்கு சரியாக செல்லாததால் அவரது தாய் கார்த்திக் பாண்டியை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் பாண்டி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அச்சன்புதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.