தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் பல பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காரணத்தால் 2 பேரை அணிக்குள் கூடுதலாக சேர்த்து உள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்குஇடையே முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வருகின்ற 26-ம் தேதி நடக்க இருக்கிறது.
அதற்காக இங்கிலாந்து அணி தயாராகி வரும் பொழுது தென்ஆப்பிரிக்காவில் தற்போதைய சூழ்நிலை சரியில்லாததால் இங்கிலாந்து வீர்ரர்கள் பல பேர் காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். இன்னும் 6 நாட்களே உள்ளதால் வீரர்கள் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் சிக்கலாகிவிடும்.
இதனால் முன்னெச்சரிக்கையாக டொமினிக் பெஸ்,மற்றும் கிரேக் ஓவர்ட்டன் ஆகிய இரண்டு வேக பந்து வீச்சாளர்களை கூடுதலாக அணியில் சேர்த்துள்ளனர். இருவரும் வருகின்ற சனிக்கிழமை அணியில் இணைய இருக்கிறார்கள்.பயிற்சி ஆட்டத்தின் போது ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆர்ச்சர், ஜேக் லீச் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.