நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்ட பிராமண சாமி என்பவர் குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் நித்தியானந்தா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த குமார் என்பவரின் ஆட்கொணர்வு மனு கடந்த 2003 ஆம் ஆண்டு தனது மகன் பல் மருத்துவர் முருகானந்தம் பிடதி ஆசிரமத்தில் சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அசரமத்தில் அவருக்கு பிராண சாமி என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.
சீடர்கள் மீது ஆசிரமத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மகனை சந்திக்கச் சென்றபோது பிடதி ஆசிரமத்தில் அனுமதி வழங்கவில்லை என்றும் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்டுத் தருமாறும் அவரது தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் நித்தியானந்தாவும் நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.