சாராயம் விற்பனை செய்த 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு கலெக்டர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு ஏரிகுத்தி கிராமத்தில் முத்தமிழன் என்பவர் வசித்து வருகின்றார். இவரை சாராயம் விற்ற வழக்கில் காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். இதேபோன்று குடியாத்தம் தாலுகா செட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவரையும் சாராயம் விற்ற வழக்கில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வாறு முத்தமிழ், சரண்ராஜ் ஆகியோர் தொடர்ச்சியாக சாராயம் காய்ச்சி விற்று வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு, போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி 2 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.