Categories
அரசியல்

இந்த 8 மாசத்துல மக்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும்… அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம்… சசிகலா பேச்சு…!!!

அம்மாவின் ஆட்சியை கட்டாயமாக தமிழ்நாட்டில் கொண்டு வருவோம் என்றும் யார் ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் என்பதை கடந்த 8 மாதங்களில் மக்கள் புரிந்து வைத்திருப்பார்கள் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை தி-நகரில் இருக்கும் இல்லத்தில் அவரின் உருவப்படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தியிருக்கிறார். அப்போது அவர் பேசியதாவது, அம்மாவின் ஆட்சியை கண்டிப்பாக தமிழ்நாட்டில் கொண்டு வருவோம்.

யார் ஆட்சி செய்தால் நல்லது, என்று இந்த 8 மாதங்களில் மக்கள் புரிந்து வைத்திருப்பார்கள். கண்டிப்பாக அனைத்து மக்களையும் அரவணைப்போம். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இருக்கக்கூடாது. கொரோனா காரணமாக மக்களை சந்திக்க முடியாமல் போனது. தற்போது, உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அதன்பின் விரைவில் மாவட்ட சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |