Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது விநியோகம் இல்லை…. பல லட்சம் ரூபாய் இழப்பீடு…. வக்கீலின் தகவல்….!!

சார்நிலை கருவூலக அலுவலர்கள் முத்திரைத்தாளை அரசு இடமிருந்து கேட்டு பெற வேண்டுமென வக்கீல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் கூடுதல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குக்கு தகுந்தவாறு முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில் நீதிமன்ற முத்திரைத்தாள் தாராபுரம் சார்நிலை கருவூலகத்தில் பொதுமக்கள் கேட்டால் விற்பனை செய்வது இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சார்நிலை கருவூலகத்தில் கிடைக்கக்கூடிய முத்திரைத்தாள் 3 வருட காலமாக கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

ஆகவே நீதிமன்ற முத்திரைத்தாள் வேண்டும் என்று அரசிடம் கருவூல அதிகாரிகள் கேட்க வேண்டும். இதுகுறித்து வக்கீல் ராஜேந்திரன் கூறியதாவது “தாராபுரம் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்காக வாதாடி வருகின்றனர். அப்போது வாதாடுவதற்கு தேவையான நீதிமன்ற முத்திரைத்தாள் வழக்கிற்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதனையடுத்துதான் வழக்கு நடைமுறைக்கு வரும். இந்நிலையில் அப்பகுதியில் செயல்படும் அரசு சார்நிலை கருவூலகத்தில் நீதிமன்ற முத்திரைத்தாள் கிடைப்பது இல்லை. அதற்கு காரணம் கேட்டால் எங்களிடம் விநியோகம் இல்லை என தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக முத்திரைத்தாள் கட்ட வேண்டிய ஒவ்வொரு வக்கீலும் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு அதை வாங்க வேண்டியுள்ளது. இந்த கருவூலகத்தில் விநியோகம் இல்லாததால் ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதல் செலவு செய்து முத்திரைத்தாள் வாங்கிக் கொடுத்தாலும் பயணிகளிடம் அதிகமான கட்டணம் வசூலிக்க முடியாது. இதனால் வக்கீல்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், மன வேதனையும் ஏற்பட்டு வருகின்றது. மேலும் தாராபுரத்தில் கருவூலகம் இருந்தும் வெளியில் வாங்குவதால் அரசுக்கு கிடைக்க வேண்டிய பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு வருகிறது. ஆகவே தாராபுரம் சார்நிலை கருவூலக அலுவலர்கள் மக்கள் சேவையை கருத்தில் கொண்டு முத்திரைத்தாளை அரசிடம் இருந்து பெற வேண்டும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |