சட்ட விரோதமாக 1௦௦௦ லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது குரும்பலூர் கிராம ஓடையில் இரண்டு பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1௦௦௦ லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தலைமறைவாக இருக்கும் கோபி என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.