சட்டவிரோதமாக மினி வேனை மணல் கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்திலுள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் வில்லியனூர் மெயின் ரோடு பகுதியில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை நிறுத்தி அவர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் சட்டவிரோதமாக மணல் கடத்திவரப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த மினி வேன் டிரைவரை அழைத்து விசாரித்தபோது அவர் ஜனார்த்தனன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஜனார்தனனை கைது செய்து மணலையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேனையும் பறிமுதல் செய்துள்ளனர்.