அனுமதியின்றி செம்மன் திருடிய 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் செம்மினிபட்டி கண்மாய் பகுதியில் சிலர் செம்மண் மணல் அள்ளிக் கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் அனுமதியின்றி செம்மண் அள்ளியது தெரியவந்துள்ளது.
அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் விக்னேஷ், பெருமாள், அஞ்சுமுத்து மற்றும் பொக்லைன் எந்திரம் டிரைவரான கார்த்திக் ஆகிய 4 பேரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, டிராக்டர், பொக்லைன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.