உப்பை அதிகமாக பயன்படுத்தினால் என்ன விளைவு ஏற்படும் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
உப்பு நம் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருள். நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் உப்பு கட்டாயமாக நாம் சேர்ப்போம். ஆனால் உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்புசக்தி பாதிக்கப்படுவதாக ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அதிக உப்பால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால் நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு நபர் 5 கிராம் உப்பை உணவில் சேர்த்தால் போதும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.