Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த 500 ரூபாய் கட்டா…? வாலிபரின் நெகிழ்ச்சியான செயல்…. குவியும் பாராட்டு….!!

ரோட்டில் கண்டெடுத்த 50 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் வாலிபர் ஒருவர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள வி.வி.சி.ஆர்.நகரில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு நந்தகுமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் திண்டல் முருகன் கோவிலில் வாகன நிறுத்துமிடத்தில் டோக்கன் விநியோகம் செய்யும் பணி செய்து வருகிறார். இதில் நந்தகுமார் பொன் வீதியிலே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே கிடந்ததை நந்தகுமார் பார்த்தார். அந்த 500 ரூபாய் கட்டை நந்தகுமார் எண்ணி பார்த்ததில் மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் இருந்தது.

இதனையடுத்து நந்தகுமார் அருகில் உள்ள கடைகளில் சென்று விசாரித்தார். அதன்பின் கீழே கண்டெடுத்த 50 ஆயிரம் ரூபாயை நந்தகுமார் காவல் நிலையத்தில் ஒப்படைக்க இருப்பதாக அங்குள்ள கடைக்காரர்களிடம் கூறிவிட்டு சென்று விட்டார். இதனைத்தொடர்ந்து ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் நந்தகுமார் அந்த பணத்தை ஒப்படைத்தார். அதன்பின் சிறிது நேரத்தில் பணத்தை தேடி ஒருவர் காவல் நிலையம் வந்தார். அப்போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் “ஈரோடு பழையபாலம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்த சோமசுந்தரம் என்பதும், இவர் பொன்வீதியில் உள்ள நகை கடையில் ஊழியராக பணியாற்றி வருபவர் என்றும்  தெரியவந்தது.

இதில் சோமசுந்தரம் 2 லட்ச ரூபாயை நகை உருக்கும் கடைக்கு கையில் வைத்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒரு நோட்டு கட்டை சோமசுந்தரம் தவறவிட்டது” காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பிறகு துணை போலீஸ் சூப்பிரண்டான ஆனந்தகுமார் முன்னிலையில் நந்தகுமார் 50 ஆயிரம் ரூபாயை சோமசுந்தரத்திடம் ஒப்படைத்தார். இவ்வாறு சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை மனிதநேயத்தோடு உரிய நபரிடம் ஒப்படைத்த நந்தகுமாரை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் உட்பட பலரும் பாராட்டினார்கள்.

Categories

Tech |