டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் ஜப்பானின் சாயகா தகாஹஷியிடம் தோல்வியடைந்தார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், ஜப்பானின் சாயகா தகாஹஷியை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 15-21 என்ற கணக்கில் பறிகொடுத்த சாய்னா நேவால், இரண்டாம் செட்டையும் 21-23 என்ற கணக்கில் தகாஹசியிடம் போராடி வீழ்ந்தார்.
இதன் மூலம் இந்தியாவின் சாய்னா நேவால் 15-21, 21-23 என்ற நேர் செட் கணக்குகளில் ஜப்பானின் சாயகா தகாஹஷியிடன் போராடித் தோல்வியடைந்தார். இத்தோல்வியின் மூலம் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்.
Badminton: Saina suffered a straight game loss against Sayaka Takahashi of Japan 15-21, 21-23. #DenmarkOpenSuper750 #DenmarkOpen2019 pic.twitter.com/PbNlwJ0DqQ
— Doordarshan Sports (@ddsportschannel) October 16, 2019