கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா க்ஷேத்ர நடை நேற்று (நவ..16) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து மேல்சாந்தி 18ம் படி முன்பு உள்ள பள்ளத்தில் அக்னியை ஊற்ற, பக்தர்கள் ஐய்யனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். அதன்பின் இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டுப் படிகள் ஏறி வரும் “வெர்ச்சுவல் க்யூ” வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி தரிசன அனுமதி தொடங்கியது.
சபரி மலை மேல் சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி, மாளிகபுரம் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்ட ஹரிஹரன் நம்பூதிரி போன்றோருக்கு அபிஷேகம் மற்றும் பதவியேற்பு விழாவும் நேற்று மாலை நடந்தது. விருச்சிக ராசிக்கு முதல் நாளான நவம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் ஆகிய இரு கோயில்களையும் புது மேல்சாந்திகள் திறப்பர். மண்டல திருவிழா காலம் நவம்பர் 17ம் தேதி முதல் டிசம்பர் 27 வரையிலும் நடைபெறும்.
டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடந்து முடிந்தவுடன் நடை அடைக்கப்படும். அதனைதொடர்ந்து மகர விளக்கு உற்சவத்துக்காக சபரிமலை கோயில் நடையானது டிச…30ஆம் தேதி மீண்டுமாக திறக்கப்படும். சபரி மலையில் இந்த வருடம் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக் காலத்தில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 13,000 காவல்துறையினர் 6 கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.