Categories
உலக செய்திகள்

#லைவ் அப்டேட்ஸ்: “ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுங்கள்”…. உக்ரைனுக்கு ரஷ்யா வலியுருதல்….!!!

ரஷ்யா உக்ரைன் மீது 26வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதுவரை நடந்த இந்த போர் தொடர்பாக முக்கிய நிகழ்வுகள் இன்று.

உக்ரைனில் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறியதாவது, “மொத்தம் 7 ஆயிரத்து 295 பேர் மனிதாபிமான தாழ்வாரங்கள் திட்டமிட்ட 7 வழித்தடங்களில் 4 வழித்தடங்கள் மூலம் உக்ரைன் நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் மரியுபோலில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு உக்ரைன் அரசு கிட்டத்தட்ட 50 பஸ்கள் இன்று அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்யா கர்னல்-ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ் பாதுகாப்பு அமைச்சகத்தால் விநியோகிக்கப்பட்ட ஒரு மாநாட்டில் மரியுபோலில் உள்ள உக்ரைன் படைகளிடம் “உங்கள் ஆயுதங்களை கீழே போட்டு  சரணடையுங்கள்”.

மேலும் “ஒரு பயங்கரமான மனிதாபிமான பேரழிவு உருவாகியுள்ளது என்றும் ஆயுதங்களைக் கீழே போடுபவர்கள் அனைவரும் மரியுபோலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு உத்தரவாதம் அழைக்கப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து மரியுபோலில் இருந்து மாஸ்கோ நேரப்படி காலை 10 மணிக்கு மார்ச் 21 இன்று மனிதாபிமான தாழ்வாரங்கள் திறக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஷ்ய படைகள் மரியுபோல் நகரை நோக்கி முன்னேறி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறுகையில். “உக்ரைனுக்கு கிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவில் முன்னேறிய ரஷ்ய படைகள் மரியுபோல் அருகே உள்ள நிகோல்ஸ்கே எல்லையை அடைந்ததாக” தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக எந்த உறுதிப்படுத்தலும் உக்ரைனிடம் இருந்து தகவல் வெளி வரவில்லை.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாற்றியுள்ளார். இதில் “இஸ்ரேலுக்கு எதிரான யூத்ர்களை 80 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் காப்பாற்றியதை நினைவு கூர்ந்து தற்போது உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நேரம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் ரஷ்யாவின் இந்த தொடர் தாக்குதலால் 34 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, பெலாரஸ், சுலோவேகியா நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஐ.நா அகதிகள் அமைப்பு ஒரு கோடி பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும் 65 லட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்து உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் ரஷ்யா உக்ரைன் நகரங்களை எல்லாம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யா உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் 3 வார காலமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில்  குண்டு மழை பொழிந்து வருகிறது.குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பிரசவ ஆஸ்பத்திரிகள், வெடிகுண்டு தவிர்ப்பு புகலிடங்கள் எதுவும் தாக்குதலுக்கு விதிவிலக்காக இல்லை.

போர் தீவிரமடைந்து வரும் நிலையில் தங்கள் சொந்த வாகனங்கள் மூலமாக கடந்த ஒரு வாரத்தில் 40 ஆயிரம் பேர்  இடம்பெயர்ந்துள்ளனர். ரஷ்ய படைகள் 2,300 பேர் ஏற்கனவே கொன்று குவிக்கப்பட்டிருபினும் குடிதண்ணீர், சாப்பாடு, மின்சாரம் எதுவும் இன்றி இந்த நகர மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ரஷ்யா ராணுவம் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 400 பேர் உயிருக்குப் பயந்து தஞ்சம் அடைந்திருந்த கலைப்பள்ளி மீது  தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் அங்கு இருந்தவர்களின் நிலைமை குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை .

இந்த நகரை உருக்குலையச்செய்து வருவது குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவிக்கையில்,  “அமைதியான நகரத்துக்கு ஆக்கிரமிப்பாளர்கள் செய்தது, பல நூற்றாண்டு காலத்துக்கு நினைவுகூரப்படும் பயங்கரவாதம் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் உக்ரைனில் உள்ள பாதாள ஆயுதக் கிடங்குகளை அழிப்பதற்கு கின்ஸால் என்னும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ரஷியா பயன்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று ரஷ்ய படைகள் மறுபடியும் கருங்கடல் துறைமுக நகரான மைகோலாய்வ் அருகேயுள்ள கோஸ்டியன்டினிவ்காவில் உள்ள எரிபொருள் கிடங்கை கின்ஸால் ஏவுகணை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய அளித்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ், “இந்த தாக்குதலில் கலிபிர் ரக குரூஸ் ஏவுகணைகளும் உயபயோகபடுத்தயுள்ளதாக” தெரிவித்துள்ளனர். வான்வழி ஏவுகணைகள் மூலம் ஓவ்ரூச்சில் வெளிநாட்டு போராளிகளும், உக்ரைன் சிறப்பு படைகளும் தங்கியுள்ள ராணுவ தளத்தை தாக்கி அழித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் நேற்று பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து ரஷ்ய படைகள் ஆக்கிரமித்து உள்ள கெர்சன், காகோவ்கா, பெர்டியான்ஸ்க் ஆகிய நகரங்களில் பேரணிகளை நடத்தி வருகின்றனர். இந்தப் பேரணியில் கெர்சனில் உக்ரைனிய தேசியக் கொடிகளை அசைத்து “கெர்சன் தான் உக்ரைன்” என்று குரல் எழுப்பிய காட்சியைக் கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |