Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக முடிந்த ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை.. ரஷ்ய அதிபர் வெளியிட்ட தகவல்..!!

சிர்கான் ஏவுகணைக்கு, ஒலியின் வேகம் போன்று 9 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய  திறன் இருப்பதாகவும், ரஷ்ய ராணுவத்திற்கான திறனை அதிகரிக்கும் என்றும் பிரதமர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார்.

சிர்கான் என்ற ரஷ்ய நாட்டின் ஹைப்பர்சானிக் ஏவுகணையானது, முதல் தடவையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து வெற்றிகரமாக  பரிசோதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருக்கிறது.

இதற்கு முன்பு, கடற்படைக் கப்பலில் இந்த ஏவுகணையை தொடர்ந்து சோதனை செய்தனர். இந்நிலையில், தற்போது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகமானது, இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, செவெரோட்வின்ஸ்க் என்ற  நீர்மூழ்கிக்கப்பலிலிருந்து சிர்கான் ஏவுகணை ஏவப்பட்டது. அது, பேரண்ட்ஸ் கடலில் வைக்கப்பட்ட போலியான இலக்கை குறிபார்த்து தாக்கியது என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், அதிபர் விளாடிமிர் புடின் இது குறித்து கூறுகையில், சிர்கான் ஏவுகணையானது, ஒலியின் வேகத்தை காட்டிலும் 9 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய திறன் கொண்டிருக்கிறது. இந்த ஏவுகணை, நாட்டின் ராணுவத் திறனை நன்றாக உயர்த்தும் என்று கூறியிருக்கிறார்.

சிர்கான் ஏவுகணைக்கான சோதனைகள் இந்த வருட கடைசியில், முடிவடையவுள்ளதாகவும், 2022ஆம் வருடத்தில் நாட்டின் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அலுவலர்கள் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |