Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து எல்லையில் நுழைய முயற்சி…. திருப்பி அனுப்பப்பட்ட ரஷ்ய விமானங்கள்…!!!

இங்கிலாந்தின் வான் எல்லையில் பகுதியில் நுழைய முயற்சித்த ரஷ்யாவை சேர்ந்த குண்டு வீசக்கூடிய விமானங்களை திருப்பி அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்கும் என்ற அச்சம் காரணமாக, இங்கிலாந்தும், தங்கள் பங்கிற்கு உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் அனுப்பி உதவிகள் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வடக்கு கடல் பகுதியில் இங்கிலாந்து நாட்டின் வான் பரப்பில் சுமார் நூறு மைல்களுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த Tu-95 Bear F என்ற குண்டு வீசக்கூடிய விமானங்கள் பறந்து கொண்டிருந்துள்ளது.

இதனை கவனித்த இங்கிலாந்தை சேர்ந்த, ராயல் ஏர் போர்ஸ் விமானங்கள், உடனடியாக சென்று ரஷ்ய நாட்டை சேர்ந்த விமானங்களை திருப்பி அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |