ரஷ்ய தொழிலதிபர் தன் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க பிரிட்டன், அமெரிக்காவில் இருக்கும் நண்பர்களிடம் உதவி கேட்டதாக வெளியான தகவல்களை அவரின் செய்தி தொடர்பாளர் மறுத்திருக்கிறார்.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுப்பதற்கு எதிராக அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்ததோடு, அங்குள்ள தொழிலதிபர்களின் சொத்துக்களை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் முடக்கியது. இந்நிலையில் செல்சியா கால்பந்து கிளப் உரிமையாளரான ரோமன் அப்ரமோவிச், அமெரிக்காவில் இருக்கும் தன் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டதால் தன் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்.
எனவே பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் தன் நெருங்கிய நண்பர்களிடம் ஒரு மில்லியன் டாலர் கடன் கேட்டதாக தகவல் வெளியானது. அதன் பிறகு ரோமன் அப்ரமோவிச்சின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்திருக்கிறார். மேலும் அவர் யாரிடமும் எந்த கடனும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.