பிரபல நடிகர், விராட்கோலி, தமன்னாவிற்கு நோட்டீஸ் அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
சூதாட்டம் எனும் மோகத்தில் எக்கச்சக்கமான பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கட்டி விளையாடுகின்றனர்.சமீப காலமாக ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி பணத்தை இழந்து மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதேபோல் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூபாய் 27 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நடிகை தமன்னா மற்றும் பிரபல மலையாள நடிகர் அர்ஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.