Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் மட்ஸ்சய சம்பதா யோஜனா திட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்!

பிரதமரின் மீன்வளத்திட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ள அவர், விவசாயம், பால் வளம் மீன்வளத்துறை சார்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அதில் அவர் தெரிவித்தாவது, ” பிரதமரின் மீன்வளத்திட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். கடல் மீன்பிடிப்பு, உள்ளூர் நீர் நிலைகளில் மீன்பிடிப்பு மற்றும் வண்ண மீன் பண்ணைகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடியில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், மீன்களை பதப்படுத்தி வைக்கும் அமைப்புகள் மற்றும் சந்தைகளை மேம்படுத்த ரூ. 9 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.20,000 கோடி திட்டத்தால் 55 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஏற்றுமதி இரட்டிப்பாகி ரூ. 1 லட்சம் கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் மீன் உற்பத்தி 70 லட்சம் டன் அளவிற்கு உயரும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்துடன் அங்கீகாரத்தை இழந்த 242 இறால் பண்ணைகள் மேலும் 3 மாதங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |