Categories
தேசிய செய்திகள்

ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மக்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் துணை நிற்கும்: பிரதமர் மோடி!

ஆம்பன் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தை புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. 72 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளன. இதேபோல் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் புயல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், ஆம்பன் புயலின் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை கொல்கத்தா சென்றடைந்தார். 83 நாட்களுக்குப் பின் பிரதமர் மோடி, முதல் முறையாக டெல்லியை விட்டு வெளிமாநிலத்துக்குச் சென்றுள்ளார். கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார். அதன்பின் அவருடன் சேர்ந்து, அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்டனர்.

இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்து வரும் மோடி, ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மக்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்திற்கு உடனடியாக ரூ.1000 கோடி ஒதுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |