Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் பேரணி… 3 இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கிய காவல்துறை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இதனை ஏற்றுக் கொண்டு, தமிழகம் முழுவது 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நவம்பர் 6 ஆம் தேதி அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அனுமதி மறுத்ததால் காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து நவம்பர் 6-ம் தேதி நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜேபி அறிவுறுத்துள்ளார்.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்காத நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற எந்த இடத்திலும் அனுமதி வழங்கவில்லை என்று ஆர்ஆர்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 23 இடங்களில் உள்ளணங்கு கூட்டமாக நடத்திக் கொள்வதாக இருந்தால் அனுமதி வழங்க தயார் என்று தெரிவித்துள்ளது. மீதமுள்ள 24 இடங்களை அனுமதி வழங்க இயலாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 6ஆம் தேதி பல இடங்களில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இளந்திரையன், பேரணிக்கு அனுமதி வழங்கப்படாத 47 இடங்களில் உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |