ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸூக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸூக்கு 30 நாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகன் தமிழ்கோவிற்கு திருமண ஏற்பாடுகளுக்காக ராபர்ட் பயாஸ் பரோல் கோரியிருந்தார்.இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது, அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேசக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பயாஸுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.