Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நோட்டமிட்ட மர்மநபர்கள்… வெளியே சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் வலைவீச்சு…!!

லாரி உரிமையாளரின் வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிரியம்பட்டி என்னும் ஊரை சேர்ந்தவர் சேகர். இவர் உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 18 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் மறுநாள் காலை வீட்டிற்கு வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த நகை பணம் அனைத்தும் காணமல் போனது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் சேகர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |