இருசக்கர வாகனம் மீது லாரி மோதி அரசு பள்ளியின் தலைமையாசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் சத்யநாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 1 – ஆம் தேதியன்று வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி சத்யநாராயணனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சத்யநாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யநாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரான முருகேசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.