Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குறுக்கே வந்த மாடுகள்…. தம்பதிகளுக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் கோர விபத்து…!!

சாலை விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமத்தூரை பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளத்தாய் என்றால் மனைவி இருந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 27 – ஆம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் கணவன் – மனைவி இருவரும் அரசு மருத்துவமனை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாடுகளினால் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் முத்துராஜ் மற்றும் வெள்ளத்தாய்க்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் வெள்ளதாய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதினால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வெள்ளதாயின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |